அஹம் க்1ரது1ரஹம் யஞ்ஞ: ஸ்வதா4ஹமஹமௌஷத4ம் |
மன்த்1ரோஹமஹமேவாஜ்யமஹமக்3னிரஹம் ஹுத1ம் || 16 ||
பி1தாஹமஸ்ய ஜக3தோ1 மாதா1 தா4தா1 பி1தா1மஹ: |
வேத்3யம் ப1வித்1ரமோங்கா1ர ருக்1ஸாம யஜுரேவ ச1 || 17 ||
அஹம்——நானே; க்ரதுஹு——வேத சடங்குகள்; அஹம்——நான்; யஞ்ஞம்——தியாகம்; ஸ்வதா——பலி; அஹம்——நான்; அஹம்——நான்; ஔஷதம்——மருத்துவ மூலிகை; மந்த்ரஹ——வேத மந்திரம்; அஹம்——நான்; அஹம்——நான்; ஏவ——மேலும்; ஆஜ்யம்——தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்; அஹம்——நான்; அக்னிஹி——நெருப்பு; அஹம்——நான்; ஹுதம்——செயல் ப்ரஸாதம்; பிதா——தந்தை; அஹம்——நான்; அஸ்ய——இதன்; ஜகதஹ——ப்ரபஞ்சத்தின்; மாதா——அம்மா; தாதா——ஆதரிப்பவர்; பிதாமஹஹ——பாட்டனார்; வேத்யம்——அறிவின் இலக்கு; பவித்ரம்——புனிதப்படுத்தபடுத்துபவன்; ஓங்—கார——ஓம் என்ற புனித எழுத்து; ரிக்——ரிக் வேதம்; ஸாம——ஸாமவேதம்; யஜுஹு——யஜுர் வேதம்; ஏவ——மேலும்; ச——மற்றும்
BG 9.16-17: நானே வேத சடங்குகள், நானே பலி, நானே முன்னோர்களுக்குப் படைக்கப்பட்ட ப்ரஸாதம். நான் மருத்துவ மூலிகை, நான் வேதமந்திரம். நான் நெய் ஆக மாற்றப்பட்ட வெண்ணை; நான் நெருப்பு (அக்னி) மற்றும் அர்ப்பணிக்கப்படும் செயல். இந்த பிரபஞ்சத்தின், நான் தந்தை; நான் தாயும் கூட, பேணும், பேரருளும் கூட. நான் புனிதப்படுத்தபடுத்துபவன், அறிவின் குறிக்கோள், ஓம் என்ற புனிதமான எழுத்து. நான் ரிக்வேதம், ஸாமவேதம், மற்றும் யஜுர் வேதம்.
இந்த வசனங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் தனது எல்லையற்ற ஆளுமையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை தருகிறார். க்1ரது1 என்றால் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அக்னிஹோத்ர யாகங்கள் போன்ற யாகம் (த்யாகம்) என்று பொருள். இது ஸ்மிருதி நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள வைஶவ தேவ போன்ற யாகங்களையும் குறிக்கிறது. ஔஶத4ம் என்பது மருத்துவ மூலிகைகளில் உள்ள ஆற்றலைக் குறிக்கிறது.
படைப்பு கடவுளிடமிருந்து வெளிப்படுகிறது, எனவே அவர் அதன் பிதா (தந்தை) ஆவார். படைப்பிற்கு முன், அவர் தனது வயிற்றில் வெளிப்படுத்தப்படாத ஜட சக்தியை வைத்திருந்தார், எனவே அவர் அதன் மாதா (தாய்) ஆவார். அவர் பிரபஞ்சத்தை பராமரித்து அதை வளர்க்கிறார், எனவே அவரே அதன் தாதா (ஆதரிப்பவர்). அவர் ப்ரஹ்மாவின் தந்தையும் ஆவார், அவர் படைப்பாளராக இருக்கிறார், அதன் விளைவாக, அவர் இந்த பிரபஞ்சத்தின் பாட்டனார் ஆவார்.
வேதங்கள் கடவுளிடமிருந்து தோன்றியவை. ராமாயணம் கூறுகிறது: ஜாகி1 ஸஹஜ ஸ்வாஸ ஶ்ருதி1 சா1ரீ 'கடவுள் தனது சுவாசத்தால் வேதங்களை வெளிப்படுத்தினார்.' அவை கடவுளின் அறிவு ஆற்றல், எனவே, அவரது வரம்பற்ற ஆளுமையின் ஒரு அம்சம். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உண்மையை வியத்தகு முறையில் அவர் வேதங்கள் என்று கூறுகிறார்.
அஹம் க்1ரது1ரஹம் யஞ்ஞ: ஸ்வதா4ஹமஹமௌஷத4ம் |
மன்த்1ரோஹமஹமேவாஜ்யமஹமக்3னிரஹம் ஹுத1ம் || 16 ||
பி1தாஹமஸ்ய ஜக3தோ1 மாதா1 தா4தா1 பி1தா1மஹ: |
வேத்3யம் ப1வித்1ரமோங்கா1ர ருக்1ஸாம யஜுரேவ ச1 || 17 ||
நானே வேத சடங்குகள், நானே பலி, நானே முன்னோர்களுக்குப் படைக்கப்பட்ட ப்ரஸாதம். நான் மருத்துவ மூலிகை, நான் வேதமந்திரம். நான் நெய் ஆக மாற்றப்பட்ட வெண்ணை; நான் …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!